சிரியாவில் வான்வழித் தாக்குதல். 10 பேர் பலி. 13 பேர் படுகாயம்..!!

சிரியாவில் வான்வழித் தாக்குதல். 10 பேர் பலி. 13 பேர் படுகாயம்..!!
சிரியாவில் வான்வழித் தாக்குதல். 10 பேர் பலி. 13 பேர் படுகாயம்..!!

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுபாட்டில் உள்ள இத்லிப் மாகாணத்தில் நேற்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 10 பேர் பலியாயினர்.

சிரியாவில் கடந்த 8 வருடங்களாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் உதவியுடன் சிரிய அரசு, கிளர்ச்சியாளர்களின் கட்டுபாட்டில் உள்ள பகுதிகளை படிப்படியாக கைப்பற்றி வருகிறது. இந்நிலையில், சிரியாவின் வடமேற்கு மாகாணமான இத்லிப்பின் மார்-அல்-நுமான் நகரில் அரசுப் படையினர் நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் இரண்டு பெண்கள் உள்பட 10 பேர் பலியானதாகவும், இரண்டு குழந்தைகள் உள்பட 13 பேர் காயமடைந்ததாகவும் சிரிய சிவில் பாதுகாப்பு எனும் தன்னார்வல அமைப்பு தெரிவித்துள்ளது.