ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம்

23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 21-ம் தேதி முதல் கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வந்தது. 

கடைசி நாளான நேற்று பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தியத்தில் கேரள வீராங்கனை பி.யூ.சித்ரா 4 நிமிடம் 14.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப் 
பதக்கத்தை வென்றார்.

இதன் மூலம் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மொத்தம் மூன்று தங்கங்களை பதிவுசெய்துள்ளது.

200 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசாவைச் சேர்ந்த டுட்டீ சந்த் வெண்கலப் பதக்கம் வென்றார்.