ஆரணி அருகே சிலிண்டர் வெடித்த சிதறிய விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!!

ஆரணி அருகே சிலிண்டர் வெடித்த சிதறிய விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!!
ஆரணி அருகே சிலிண்டர் வெடித்த சிதறிய விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!!

ஆரணி அருகே சிலிண்டர் வெடித்த சிதறிய விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!!

ஆரணி : ஆரணி அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புதுக்காமூர் தெருவை சேர்ந்தவர் சந்திரா என்பவரது வீட்டில் கடந்த 15ம் தேதி சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் அருகில் இருந்த மூன்று வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் 7 பேர் சிக்கிய நிலையில் 8 வயது சிறுவன் ஹேம்நாத் உள்பட 3 பேர் பலியாகினர்.இந்நிலையில் ஆரணி சிலிண்டர் வெடித்த விபத்தில் மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். பூ வியாபாரம் செய்யும் முத்தாபாய் மற்றும் அவரது வளர்ப்பு மகள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர்.