அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம் ரிக்டரில் 3.0

அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம் ரிக்டரில் 3.0
அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம் ரிக்டரில் 3.0

அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம் ரிக்டரில் 3.0

 

வடகிழக்கு மாநில பகுதிகளில் ஒன்றான அருணாசல பிரதேசத்தின் தவாங் நகரில் இன்று காலை 8.21 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 3.0 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  இதன்படி, இமாசல பிரதேசத்தின் லஹால் மற்றும் ஸ்பிடி ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை 2.43 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 3.3 ஆக பதிவாகி உள்ளது.

இதேபோன்று, மணிப்பூரின் காம்ஜோங் பகுதியில் இன்று அதிகாலை 3.12 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 3.4 ஆக பதிவாகி உள்ளது.  எனினும், இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.