சமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த பெண்ணுக்கு அரசு பணி

சமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த பெண்ணுக்கு அரசு பணி
சமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த பெண்ணுக்கு அரசு பணி

திருச்சி: சமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த பெண்ணுக்கு அரசு பணி வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தரவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கோயில் வளாகத்தில் யானை தாக்கியதால் கோயில் நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. சரிவர பராமரிக்காததால் கோயில் யானை தாக்கியதற்கு இழப்பீடு மற்றும் அரசு பணி தர உத்தரவிடக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.