கொரோனா ஊரடங்கு: இந்தியாவின் பரபரப்பான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தபடி, 14 மணி நேர மக்கள் ஊரடங்கு நாடு முழுவதும் மார்ச் 22ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.
தலைநகர் டெல்லி, சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய மாநகரங்கள், நகரங்கள் என அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. மக்கள் நடமாட்டமோ, வாகனப் போக்குவரத்தோ இல்லாமல் தெருக்கள், சாலைகள் துடைத்து வைத்ததைப் போல காட்சியளிக்கின்றன.