போராட்டம் காரணமாக தில்லி செங்கோட்டை பகுதியில் 144 தடை உத்தரவு

போராட்டம் காரணமாக தில்லி செங்கோட்டை பகுதியில் 144 தடை உத்தரவு

புது தில்லி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் காரணமாக தில்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தில்லி செங்கோட்டை பகுதியில் போராட்டம் நடைபெற வாய்ப்பிருக்கும் காரணத்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லி காவல்துறை 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில், கர்நாடகாம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.