தீவிரமடைந்து வரும் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) அமைப்பின் போராட்டம்!

தீவிரமடைந்து வரும் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) அமைப்பின் போராட்டம்!

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) நடைபெற்ற வினாத்தாள் கசிவு மற்றும் சி.பி.எஸ்.இ (CBSE) மதிப்பீட்டு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று, மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) அமைப்பின் சார்பில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

கல்வித் துறையில் நிலவும் முறைகேடுகளுக்குக் கண்டனம் தெரிவித்து மாணவர்களும் இளைஞர்களும் திரண்டுள்ள இந்தப் போராட்டத்தை, நாடு முழுமைக்கும் கொண்டு செல்லும் வகையில் அகில இந்திய அளவில் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்ளிட்ட முன்னணிச் செயல்பாட்டாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ள இந்தப் போராட்டத்தில், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் கலைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்வி அமைப்பின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மாணவர்களுக்கு நீதி கிடைக்கவும் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதில் போராட்டக்காரர்கள் உறுதியாக உள்ளனர்.