ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் சித்திரை திருவிழா தேர்த் திருவிழா! – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

 ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் சித்திரை திருவிழா தேர்த் திருவிழா! – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை மாத விருப்பன் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்த் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ‘ரங்கா ரங்கா’ என முழக்கமிட்டபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

அதிகாலையில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் தேரில் எழுந்தருள, நான்கு சித்திரை வீதிகளிலும் தேர் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தது. விழாவின் முக்கியத்துவத்தைக் கருதி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததோடு, கோடை வெயிலைச் சமாளிக்கப் பக்தர்களுக்குத் தண்ணீர்ப் பந்தல்கள் மற்றும் மருத்துவ உதவிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சித்திரை திருவிழாவின் 9-வது நாளான இன்று நடைபெற்ற இந்தத் தேரோட்டம், ஸ்ரீரங்கம் பகுதியைத் திருவிழாக் கோலமாக மாற்றியதுடன், வெளியூர் பக்தர்களின் வருகையால் ஊரே களைகட்டியது.