முதல்வரைச் சந்தித்து பாஜக தலைவர் வேண்டுகோள் விநாயகர் சிலைகளுக்கு அனுமதி கோரி

 முதல்வரைச் சந்தித்து பாஜக தலைவர் வேண்டுகோள் விநாயகர் சிலைகளுக்கு அனுமதி கோரி

தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதியளிக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கேட்டுக்கொண்டார்.

தமிழக முதல்வரைச் சந்தித்த பிறகு எல். முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"விநாயகர் சதுர்த்தி விழாவை, அரசின் சட்டத்துக்குள்பட்டு சமூக இடைவெளியுடன் கட்டுப்பாட்டுடன் நடத்த அனுமதியளிக்குமாறு கோரிக்கை வைத்தோம். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு தெரிவிப்பதாக முதல்வர் கூறினார். முதல்வருடனான சந்திப்பு திருப்தியளிக்கும் வகையில் இருந்தது. விநாயகர் சதுர்த்தி விழா பற்றி மட்டுமே இந்த சந்திப்பில் பேசப்பட்டது." என்றார் முருகன்.

முன்னதாக, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி, பொது இடங்களில் சிலை நிறுவக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.