திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களுக்கு தரிசன நேரம் குறைப்பு

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களுக்கு தரிசன நேரம் குறைப்பு
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களுக்கு தரிசன நேரம் குறைப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய நாளை முதல் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை முதல் காலை 5 மணியில் இருந்து இரவு 7 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்டுகிறது. தங்கத்தேர் வலம் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூர்கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரம் 3 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மார்கழி மாதம் என்பதால் அதிகாலை 3 முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.