கரோனா பரிசோதனை முடிவுகள் வரும் முன்னரே ஒருவர் நாகர்கோவிலில் உயிரிழந்தார்

கரோனா பரிசோதனை முடிவுகள் வரும் முன்னரே  ஒருவர்   நாகர்கோவிலில் உயிரிழந்தார்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கோடிமுனை பகுதியைச் சேர்ந்த  நபர்.இவர் கடந்த மார்ச் 3-ம் தேதி குவைத் நாட்டில் இருந்து, சொந்த ஊருக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதை     தொடர்ந்து ஒருவரது சளி மாதிரி, நெல்லை அரசு மருத்துவமனைக்கு கரோனா பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டு இருந்தது. அதற்கான முடிவுகள் இன்னும் வரவில்லை. இந்நிலையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த 40 வயது நபர் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார்.

இங்கு இதுவரை 10க்கும் அதிகமானோர் கரோனா அறிகுறியோடு அட்மிட் செய்யப்பட்டிருந்தாலும், யாருக்கும் கரோனா உறுதி செய்யப்படவில்லை. இதனால் தொடர் சிகிச்சைக்குப் பின்னர் தனிமைப்படுத்துதலில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

அவருக்கு ஏற்கெனவே கல்லீரலில், மூளைக்காய்ச்சல் பிரச்சினை இருந்ததாகவும், அந்த நோய் மிகத்தீவிரம் அடைந்ததாலுமே இறந்திருப்பதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் கடந்த மார்ச் 3-ம் தேதி குவைத் நாட்டில் இருந்து, சொந்த ஊருக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.