புத்தாண்டில் அதிக குழந்தைகள் பிறந்த நாடு - இந்தியா சாதனை..!

புத்தாண்டு தினத்தன்று உலகம் முழுக்க 3,95,078 பிறந்துள்ளதாக UNICEF நிறுவனம் தெரிவித்துள்ளது
குழந்தை பிறப்பு என்றாலே மகிழ்ச்சியான விஷயம் தான் அதிலும் வருடத்தின் முதல் நாள் பிறக்கும் குழந்தைகள் இன்னுமே சிறப்பு .ஒவ்வொரு ஆண்டும் UNICEF புத்தாண்டு நாளில் பிறந்த குழந்தைகளை கொண்டாடுகிறது.
இவ்வருட புத்தாண்டு நாளில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை அடிப்படையில் சில நாடுகளின் பட்டியலை UNICEF வெளியிட்டுள்ளது . அதன்படி இந்தியாவில் 67,385 குழந்தைகளும் , சீனாவில் 46,299 குழந்தைகளும் , நைஜீரியாவில் 26,039 குழந்தைகளும் , பாகிஸ்தான் 16,787 குழந்தைகளும் , இந்தோனேசியாவில் 13,020 குழந்தைகளும் , அமெரிக்காவில் 10,452 குழந்தைகளும் , காங்கோவில் 10,247 குழந்தைகளும், எத்தியோப்பியாவில் 8,493 குழந்தைகளும் பிறந்துள்ளன .
இந்த பட்டியலின் அடிப்படையில் இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பிறந்திருக்கின்றன என்று தெரியவருகிறது.
இந்த பட்டியலின் அடிப்படையில் இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பிறந்திருக்கின்றன என்று தெரியவருகிறது .இந்நிலையில்தான் இந்த ஆண்டு ஜனவரி முதல் நாள் இந்தியாவில் அதிக பட்சமாக 67385 குழந்தைகள் பிறந்துள்ளன . உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவை இதன் மூலம் இந்தியா பின்னுக்கு தள்ளி இருக்கிறது.