கருப்பு பட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம் அறிவிப்பு: தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம்
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம்: கருப்பு பட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம் அறிவிப்பு
சென்னை, ஜூலை 29: தமிழ்நாடு அரசின் ஆட்குறைப்பு தொடர்பான அரசாணை எண் 204-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் மாநிலம் முழுவதும் செவிலியர்கள் பங்கேற்கும் அடையாளப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் ஜூலை 28, 2026 அன்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஜூலை 29, 2026 அன்று மாநிலம் முழுவதும் அனைத்து செவிலியர்களும் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றுவது எனவும், ஜூலை 30 மற்றும் 31, 2026 ஆகிய இரண்டு நாட்களில் கோரிக்கை அட்டை (Demand Card) அணிந்து பணியாற்றுவது எனவும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு அரசின் ஆட்குறைப்பு தொடர்பான அரசாணை எண் 204-ஐ திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் இந்த அடையாளப் போராட்டம் நடைபெறுகிறது என்று சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து செவிலியர்களும் கருப்பு பட்டை மற்றும் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றி, போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.