மண்ணில் புதைந்த வரலாறு மீட்பு: 12-ம் நூற்றாண்டு சமண கல்வெட்டு

மண்ணில் புதைந்த வரலாறு மீட்பு: 12-ம் நூற்றாண்டு சமண கல்வெட்டு
மண்ணில் புதைந்த வரலாறு மீட்பு: 12-ம் நூற்றாண்டு சமண கல்வெட்டு
மண்ணில் புதைந்த வரலாறு மீட்பு: 12-ம் நூற்றாண்டு சமண கல்வெட்டு
மண்ணில் புதைந்த வரலாறு மீட்பு: 12-ம் நூற்றாண்டு சமண கல்வெட்டு
மண்ணில் புதைந்த வரலாறு மீட்பு: 12-ம் நூற்றாண்டு சமண கல்வெட்டு

12 ஆண்டுகளுக்கு முன் - என் வாழ்வில் மறக்க முடியாத நாள் இது.

மண்ணில் புதைந்திருந்த எங்கள் வரலாற்றை மீட்டெடுத்த கதை


சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு. என் சொந்த ஊரான ஆறகழூரில் ஒரு ஜினாலயம் இருந்ததற்கான தடயங்கள் இருப்பதை கண்டறிந்தேன். சுமார் 3 மாதங்கள் தொடர் தேடல், விசாரிப்புக்குப் பிறகு, வயல்வெளியில் மண்ணில் புதைந்து கிடந்த இந்தக் கல்வெட்டை நான் கண்டறிந்தேன்.

இதை மீட்டெடுப்பது மட்டும் என்னால் முடிந்த காரியம் அல்ல. என் அன்புத்தம்பி சந்தோஷ் மற்றும் ஆறகழூர் ஊர்மக்கள் உதவியுடன், திரு. விழுப்புரம் வீரராகவன் ஐயா அவர்கள் மூலம் இந்தக் கல்வெட்டு படியெடுக்கப்பட்டு, அஸ்திவாரம் அமைத்து நிலை நிறுத்தினோம்.

இந்தக் கண்டுபிடிப்பு 'ஆவணம்' 2016 இதழில் ஆவணப்படுத்தப்பட்டு வெளிவந்துள்ளது. வாழ்வில் உருப்படியாய் ஒரு காரியம் செய்த மனத்திருப்தி எனக்கு இன்றும் இருக்கிறது.

நீங்கள் படத்தில் பார்ப்பது அதே கல்வெட்டுதான். மேலே தீர்த்தங்கரர், அதன் கீழே கல்வெட்டு வாசகம்.
கல்வெட்டு பாடம் - வரி மாறாமல்
இந்தக் கல்வெட்டின் வாசகத்தை வரிமாறாமல் அப்படியே கீழே தருகிறேன்:
1. ஸ்வஸ்திஸ்ரீ இந்த
2. ஸ்ரீ கோயில் பொன்
3. பரப்பின பெருமாள்
4. ஜிநாலயமான
5. நாற்பத்தெண்ணா
6. யிரப்பெரும்பள்ளி
7. நாற்பத்தெண்ணா
8. யிரவர் ரக்ஷை
#### இந்த 8 வரிகள் சொல்லும் வரலாறு என்ன?

இது வெறும் 8 வரிகள் அல்ல, 12-ம் நூற்றாண்டு ஆறகழூரின் பொற்காலத்தின் சாட்சி.

1. பொன்பரப்பின பெருமாள் யார்?
இவர் சாதாரண மன்னர் அல்ல. ஆறகளூரை தலைநகராகக் கொண்டு மகதை மண்டலத்தை ஆண்டவர். இவரது இயற்பெயர் பொன்பரப்பினான் என்ற வாணகோவரையன். வாணகோவரையர்கள் மலையமான்களின் உறவினர்கள்.. இவர் கட்டியதுதான் இந்த 'ஸ்ரீ கோயில்'.

2. நாற்பத்தெண்ணாயிரப் பெரும்பள்ளி என்றால் என்ன?

ஜிநாலயம் என்பது சமணக் கோயில். பெரும்பள்ளி என்பதும் சமணப் பள்ளியைக் குறிக்கும் சொல். 'நாற்பத்தெண்ணாயிரம்' என்பது ஒரு சமணப் பிரிவின் பெயராகவும், வணிகக் குழுவின் பெயராகவும் வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். அதாவது இது ஒரு பெரும் சமண மடாலயமாக இருந்திருக்கிறது.

3. நாற்பத்தெண்ணாயிரவர் ரக்ஷை
இதுதான் மிக முக்கியமான வரி. இந்தக் கோயிலைப் பாதுகாக்கும் பொறுப்பு 'நாற்பத்தெண்ணாயிரவர்' என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை இது குறிக்கிறது. அன்று கோயில்கள் ஊரின் பாதுகாப்புக் குழுக்களால் பராமரிக்கப்பட்டதற்கு இது ஆதாரம்.

காலம்: இதன் எழுத்தமைதி கொண்டு இது 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த ஜினாலயத்தின் சிலைகள் இன்று எங்கே?

இந்த ஜினாலயத்தில் இருந்த மூன்று பொக்கிஷங்கள் இன்றும் நம்மிடம் உள்ளன. படத்தில் நீங்கள் காணும்

* உலோகத்தால் ஆன மகாவீரர் •

 உலோகத்தால் ஆன அம்பிகா யக்ஷி •

 பளிங்குக் கல்லால் ஆன அருகர் சிலை

ஆகிய மூன்றும் தற்போது ஆறகளூர் திருக்காமீசுவரமுடைய நாயனார் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் ஒரு வேதனையான செய்தி... இங்கிருந்த 5 அடி உயரமுள்ள கல்லால் செய்யப்பட்ட மகாவீரர் மற்றும் அம்பிகா சிலைகள் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போய்விட்டன. அவை இருக்கும் இடம் இன்றுவரை தெரியவில்லை.

இந்தக் கல்வெட்டு மீட்டெடுக்கப்பட்டதன் மூலம் ஆறகழூர் ஒரு சமண மையமாகவும் இருந்துள்ளது என்பதற்கான அசைக்க முடியாத ஆதாரம் கிடைத்துள்ளது.

வரலாற்றைத் தேடுவோம்! நம் மண்ணின் பெருமையைக் காப்போம்!

என்றும் வரலாற்றுப் பணியில்,
ஆறகளூர் பொன்.வெங்கடேசன்
தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம்