வங்கி கணக்கில் ரூ.2000.. மத்திய அரசின் தீபாவளி aபரிசு

மத்திய அரசு விவசாயிகளுக்கு தீபாவளி பரிசு வழங்க தயாராகி வருகிறது. அந்த வகையில் விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.2000 வரவு வைக்கப்பட உள்ளது. பிஎம் கிசான் திட்டத்தின் 21வது தவணை நிதி தீபாவளி தினமான இன்று (அக்.20) வங்கியில் வரவு வைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சில விவசாயிகளின் கணக்குகளில் ஏற்கனவே பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களுக்கு தீபாவளி பண்டிகை தினத்திலோ பின்னரோ வரவு வைக்கப்படும் என கூறப்படுகிறது.