சுற்றுச்சூழல் பாதுகாக்க அரிமா மாவட்ட ஆளுநர் ராஜேஷ் ஜோஷி ஒரு லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம் தொடங்கினார்

சுற்றுச்சூழல் பாதுகாக்க அரிமா மாவட்ட ஆளுநர் ராஜேஷ் ஜோஷி ஒரு லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம் தொடங்கினார்
சுற்றுச்சூழல் பாதுகாக்க அரிமா மாவட்ட ஆளுநர் ராஜேஷ் ஜோஷி ஒரு லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம் தொடங்கினார்
சுற்றுச்சூழல் பாதுகாக்க அரிமா மாவட்ட ஆளுநர் ராஜேஷ் ஜோஷி ஒரு லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம் தொடங்கினார்
சுற்றுச்சூழல் பாதுகாக்க அரிமா மாவட்ட ஆளுநர் ராஜேஷ் ஜோஷி ஒரு லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம் தொடங்கினார்
சுற்றுச்சூழல் பாதுகாக்க அரிமா மாவட்ட ஆளுநர் ராஜேஷ் ஜோஷி ஒரு லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம் தொடங்கினார்
சுற்றுச்சூழல் பாதுகாக்க அரிமா மாவட்ட ஆளுநர் ராஜேஷ் ஜோஷி ஒரு லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம் தொடங்கினார்
சுற்றுச்சூழல் பாதுகாக்க அரிமா மாவட்ட ஆளுநர் ராஜேஷ் ஜோஷி ஒரு லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம் தொடங்கினார்
சுற்றுச்சூழல் பாதுகாக்க அரிமா மாவட்ட ஆளுநர் ராஜேஷ் ஜோஷி ஒரு லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம் தொடங்கினார்

சுற்றுச்சூழல் பாதுகாக்க 3241-C அரிமா மாவட்ட ஆளுநர் ராஜேஷ் ஜோஷி ஒரு லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம் தொடங்கினார்...


சென்னை கலைவாணர் அரங்கத்தில் பன்னாட்டு அரிமா சங்கம், 3241-C அரிமா மாவட்டம், அமைச்சரவை நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா 26 /7 /2026 அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

இதில் 3241-C அரிமா மாவட்டத்தில் உள்ள அனைத்து மண்டலங்களை சார்ந்த அரிமா சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள்  கொடி  அணிவகுப்பு நடத்தினர்.

கொடி அணி வகுப்பு மரியாதையை மாவட்ட ஆளுநர் துணை ஆளுநர்கள் அமைச்சரவை நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர்.

மாவட்ட அமைச்சரவை நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் சென்னை கிரீன் சிட்டி அரிமா சங்கம் மற்றும் கே.வி.ஜி அரிமா சங்கம் இணைந்து  சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி  ஒரு லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டத்தினை ஏற்பாடு  செய்திருந்தனர்.

இதில் அரிமா மாவட்ட ஆளுநர் PMJF  லயன்.ராஜேஷ்ஜோஷி, முதல் நிலை மாவட்ட துணை ஆளுநர் PMJF லயன்.உதயசூரியன் இரண்டாம் நிலை மாவட்ட துணை ஆளுநர் PMJF லயன்.ரமேஷ்ராகவன் ஆகியோர் கலந்து கொண்டு
ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை
தொடங்கி  வைத்து  நிகழ்ச்சியில்   கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கினர்.

அதைத்தொடர்ந்து சென்னை கிரீன் சிட்டி அரிமா சங்கத்தின் நிறுவனர் லயன்.ஐ.நா.கண்ணன், கிளப் தலைவர் வழக்கறிஞர் லயன்.D.நரேஷ்குமார், செயலாளர் லயன்.G.செல்லப்பா, பொருளாளர் லயன்.M.அண்ணாமலை, மற்றும் கே.வி.ஜி அரிமா சங்கம் நிறுவனர் லயன் K.V.கோபாலகிருஷ்ணன் நிர்வாகிகள் தலைவர் லயன் ஆனந்தன் செயலாளர்
லயன் சக்திவேல் பொருளாளர் உமாசங்கர், ஆறுமுகம் ஆகியோர் இணைந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கினார்கள்.