துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம்
![துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம்](http://www.chennaipatrika.com/uploads/images/image_750x_5f81549e0ad1a.webp)
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம்
திருமலை:
சென்னையில் இருந்து நேற்று பகல் 2.45 மணிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், காரில் திருப்பதி புறப்பட்டு சென்றார். மாலையில் கீழ் திருப்பதியில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு திருப்பதி மலைக்கு சென்றார். ஏற்கனவே, அங்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்த அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத் ஆகியோர் அவரை வரவேற்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்