பெட்ரோல், டீசல் விலை 7 வது முறையாக உயர்வு!

 பெட்ரோல், டீசல் விலை 7 வது முறையாக உயர்வு!

கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்திய எண்னெய் நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்தித்து வந்த நிலையில், இழப்பை ஈடுசெய்யும் நடவடிக்கையாக கடந்த 15 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயரத் தொடங்கியது. 15 ஆம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் 6 காசுகள், டீசல் 3 ரூபாய் 8 காசுகள் உயரத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களில் என இதுவரை 6 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று 7 வது முறையாக உயரத்தப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.01-க்கும், டீசல் லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.99.78-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை இப்படி தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்