காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை வைபவம் விமரிசையாக நடைபெற்றது

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை வைபவம் விமரிசையாக நடைபெற்றது

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், உலகப் புகழ்பெற்ற அத்தி வரதர் குடிகொண்டிருப்பதுமான காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலின் வைகாசி பிரம்மோற்சவப் பெருவிழா, கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக பெருமாள் காலை மற்றும் மாலை வேளைகளில் சிம்மம், ஹம்சவார்த்தனி, சூரியபிரபை போன்ற பல்வேறு தெய்வீக வாகனங்களில் எழுந்தருளி, காஞ்சிபுரத்தின் முக்கிய ராஜவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.