தமிழகத்தில் 2,144 பேருக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கிய முதல்வர் ஜோசப் விஜய்

தமிழகத்தில் 2,144 பேருக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கிய முதல்வர் ஜோசப் விஜய்

சென்னை மாநிலக் கல்லூரியில் மருத்துவத் துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஜோசப் விஜய் கலந்துகொண்டார். இவ்விழாவில், தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்கள் என மொத்தம் 2,144 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளை அவர் நேரடியாக வழங்கினார்.

 

தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ. 139.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 35 புதிய மருத்துவக் கட்டடங்களை அவர் திறந்து வைத்ததோடு, அங்குக் நிறுவப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டையும் தொடங்கிவைத்தார்.

அரசு மருத்துவமனைகளின் மேம்பாட்டிற்குப் பங்களிக்க விரும்பும் பெரு நிறுவனங்கள் (கார்ப்பரேட்கள்) மற்றும் பொதுமக்கள் எளிதாக நிதியுதவி அளிக்கும் வகையில், ‘நலம் டிஎன்’ (Nalam TN) என்ற புதிய இணையதளச் சேவையை முதல்வர் ஜோசப் விஜய் மக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தினார்.

இவ்விழாவில் பேசிய மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ், பொதுமக்கள் தங்களது குடும்பத் திருமணங்கள் மற்றும் பிறந்தநாள் போன்ற வாழ்வியல் நிகழ்வுகளைக் கொண்டாடும் விதமாக ‘நலம் டிஎன்’ இணையதளம் வழியாக அரசு மருத்துவமனைகளுக்கு நன்கொடை வழங்கலாம் எனக் கேட்டுக்கொண்டார். நன்கொடையாளர்கள் தாங்கள் விரும்பும் குறிப்பிட்ட அரசு மருத்துவமையைத் தேர்ந்தெடுத்து நிதி வழங்கவும், அவ்வாறு பெறப்படும் நிதியின் பயன்பாட்டை வெளிப்படைத்ன்மையுடன் கண்காணிப்பதற்கும் இந்த இணையதளத்தில் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் விளக்கமளித்தார்.