நெல் அரிசி வணிகர்கள் தினம் மற்றும் மாணவர் இல்ல நலத் திட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்ல விவேகானந்தர் அரங்கத்தில், 'நெல் அரிசி வணிகர்கள் தினம்' மற்றும் 'மாணவர் இல்ல நலத் திட்ட நிகழ்ச்சி' சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளனம் மற்றும் சென்னை நகர நெல் அரிசி வியாபாரிகள், அரிசி ஆலை உரிமையாளர் சங்கம் சார்பில் இந்நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது.
தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில், மாநில சம்மேளனச் செயலாளர் Dr. A.C. மோகன் வரவேற்புரையாற்றினார். மாநில சம்மேளனத் தலைவர் Ln. D. துளசிங்கம் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட மாண்புமிகு தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், திரு. ப. வெங்கடரமணன் அவர்கள், மாணவர்களுக்கான நலத் திட்ட உதவிகளை வழங்கிச் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லச் செயலர் சுவாமி தர்மிஷ்டானந்தர் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்வின் நிறைவில், மாநில சம்மேளனப் பொருளாளர் திரு. கணேச அருணகிரி நன்றியுரை ஆற்றினார்.
சுவாமி சத்யஞானானந்தஜி மகராஜ், தலைவர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை நகர நெல் அரிசி வியாபாரிகள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திரு. C. துரை ராஜ், செயலாளர் திரு. S. பாலமுருகன், பொருளாளர் திரு. K. ரத்தின குமார் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் விழாவில் கலந்துகொண்டனர்.